பைக் மீது கார் மோதல்: 5 பேர் உயிரிழப்பு

பைக் மீது கார் மோதல்: 5 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள ரெண்டலபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (30). எலெக்ட்ரீஷியன். இவரது மனைவி அருணா (25), குழந்தைகள் ரக்சன் ஜோ (5), ரக்ஷிதா (3).

இந்நிலையில், நேற்று பிற்பகல் அருணா, அவரது 2 குழந்தைகள், அருணாவின் தாயார் சரோஜாதேவி (54) ஆகியோர் ஜார்ஜ் பைக்கில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டனர். திண்டுக்கல் - நத்தம் சாலையில் நல்லாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக நத்தம் நோக்கிச் சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஜார்ஜ் ஓட்டிய பைக் உள்ளிட்ட 2 பைக்குகள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஜார்ஜ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். சரோஜாதேவியும், மற்றொரு பைக்கில் வந்த குழந்தைசாமி என்பவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரோஜாதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in