Published : 30 May 2018 08:55 PM
Last Updated : 30 May 2018 08:55 PM
தங்கையை திருமணம் செய்ய பெண் பார்க்க வந்தவர், திருமணமாகி 3 வயது குழந்தையுடன் இருந்த அக்காவுடன் ஓடிவிட்டதால் போலீஸில் பெண் வீட்டார் புகார் அளித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் ஏகாம்பரம் பிள்ளைத்தெருவில் வசிப்பவர் முருகன்(50). இவருக்கு ராதா(26)( பெயர் மாற்றப்பட்டுள்ளது), கீதா(22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள்கள் உள்ளனர். ராதா திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனது இளைய மகள் கீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்க முடிவு செய்தார் முருகன்.
அண்ணாதுரை(28) என்பவர் கீதாவை பெண் பார்க்க வந்தார். மாப்பிள்ளை மணமகள் கீதாவை பெண் பார்த்தார். அப்போது அவர் கீதாவின் அக்கா ராதாவை பார்த்துள்ளார். இருவரும் பேசியுள்ளனர். இந்நிலையில் தங்கை கீதாவை பெண் பார்த்துவிட்டு சென்ற அண்ணாதுரை பதிலேதும் சொல்லவில்லை.
ஆனால் அக்கா ராதாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 4-00 மணி அளவில் ராதா தனது மூன்று வயது மகனுடன் தங்கையை பெண் பார்க்க வந்த அண்ணாதுரையுடன் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். வீட்டில் ராதா இல்லாததையும் அவர் அண்ணாதுரையுடன் சென்றதையும் தெரிந்துக்கொண்ட முருகன் மயிலாப்பூர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதில் தனது திருமணமான மகள் ராதா 3 வயது ஆண் குழந்தையுடன் வீட்டிலிருந்த 5 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்துடன், தனது இளைய மகளை பெண் பார்க்க வந்த அண்ணாதுரை என்பவருடன் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். போலீஸார் அண்ணாதுரையையும், ராதாவையும் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT