Published : 17 May 2018 09:10 AM
Last Updated : 17 May 2018 09:10 AM
சென்னை திருவல்லிக்கேணி ஹபீபுல்லா தெருவில் உள்ள மின் இணைப்புப் பெட்டியில் நேற்று மாலை திடீரென தீப் பிடித்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். சிலர் தீயணைப்பு அவசர எண் 101-க்கு போன் செய்தனர்.
ஆனால் முழு ரிங் சென்று முடிந்த பின்னரும் போனை யாரும் எடுக்கவில்லை. சிலர் வாகனங்களில் நேரடியாக வாலாஜா தீயணைப்பு நிலையத்துக்கு சென்று தகவல் கூறினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்த னர். தீயணைப்புத்துறை தலைமை அலுவலகம் அருகே கேபிள் பதிக்கும் வேலை நடப்பதால் 101 சேவை தற்காலிக மாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT