பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவளமணி கண்டெடுப்பு

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவளமணி கண்டெடுப்பு
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து அகழாய்வு பணி இயக்குநர் தங்கதுரை கூறியது:

2-ம் கட்ட அகழாய்வில் 2 சூதுபவள மணிகளில் ஒன்று முழுமைபெற்ற நிலையிலும், மற்றொன்று முழுமை அடையாத நிலையிலும் கிடைத்துள்ளன. மற்றொரு குழியில் அக்கேட் வகை மணி ஒன்றும்கிடைத்துள்ளது. இது துளையிடதொடங்கி முழுமை அடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டு காணப்படுகிறது. இது, பொற்பனைக் கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றாக விளங்குகிறது. சூது பவள மணி கிடைத்திருப்பது உள்நாட்டு வணிகத்தை குறிப்பதாக உள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in