Published : 06 May 2018 07:58 AM
Last Updated : 06 May 2018 07:58 AM

‘படித்ததும் பதற்றத்தில் மறந்துவிடும்போல இருக்கிறது’

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 மாணவ, மாணவிகள் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காரைக்கால் - எர்ணாகுளம் விரைவு ரயிலில் எர்ணாகுளம் சென்றனர்.

இதில் பலருக்கு இருக்கை கிடைக்காததால் முன் பதிவு அல்லாத பெட்டிகளில் பயணம் செய்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: காரில் எர்ணாகுளத்துக்குச் செல்வதற்கு ரூ. 9,000 கட்டணம் கேட்கின்றனர். வசதி உள்ளவர்கள் செல்கின்றனர். வசதி இல்லாதவர்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும் ரயில், பேருந்துகளில் செல்பவர்கள் அங்குள்ள மையத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கே ஒரு நாளாகிவிடும். அதன் பிறகு தங்குமிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். நாளும், நேரமும் விரயமாவதால், படிப்பதற்கும் சிரமமாக உள்ளது. இவ்வளவு காலம் சிரமப்பட்டு படித்ததும், இந்தப் பதற்றத்தில் மறக்கக்கூடிய நிலை உள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x