Published : 19 May 2018 07:45 AM
Last Updated : 19 May 2018 07:45 AM

உயர் நீதிமன்ற கோடை விடுமுறை கால அமர்வுக்கான நீதிபதிகள் மாற்றம்

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கோடை விடு முறைகால கடைசி அமர்வுக்கான நீதிபதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கோடை விடுமுறைகால கடைசி சிறப்பு அமர்வுக்கான நீதிபதிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பாஸ்கரன், ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நீதிபதிகள் எம்.வி.முரளிதரன் மற் றும் டி.கிருஷ்ணவள்ளி ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வரும் மே 30 மற்றும் மே 31 ஆகிய தேதிகளில் அவசரமாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பர்’’ என அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x