Published : 31 Aug 2014 09:35 AM
Last Updated : 31 Aug 2014 09:35 AM

பன்நோக்கு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்ற முடிவு: எம்சிஐ-யிடம் தமிழக அரசு விண்ணப்பம்

சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, மருத்துவ கல்லூரியாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் (எம்சிஐ) தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்தாராம் சனிக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 26-வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 2-ம் தேதி நடக்க உள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்த 14,260 மாணவ, மாண விகள் பட்டங்களை பெற உள்ளனர். மாணவர்களுக்கு ஆளுநர் ரோசய்யா பட்டங்களை வழங்குவார். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட நிதி கேட்டுள்ளோம். மாணவ, மாணவிகளின் விடைத்தாளை ஆன்லைன் முறையில் மதிப்பீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனை தற்போது சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறோம்.

சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, மருத்துவ கல்லூரியாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனுமதி கேட்டு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்சிஐ) விண்ணப்பித்துள்ளோம். எம்சிஐ அனுமதி கிடைத்தால் அடுத்த கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, கல்லூரி செயல்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x