Published : 03 May 2018 09:13 AM
Last Updated : 03 May 2018 09:13 AM
உச்ச நீதிமன்றத்தில் தண்டனை பெற்று சிறைக்குச் செல்லும்போதே கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியை அதிமுக சட்ட விதிப்படி சசிகலா இழந்துவிட்டார் என்று துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மே தின விழாக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்:
சசிகலா இன்னும் அதிமுகவில் இருந்து நீக்கப்படாமல் இருக்கிறாரா?
உச்ச நீதிமன்றத்தில் தண்டனை பெற்று சிறைக்குச் செல்லும்போதே அதிமுகவின் சட்ட விதிப்படி அடிப்படை உறுப்பினருக்கான தகுதியை சசிகலா இழந்துவிட்டார்.
மூன்றாவது அணிக்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை பலர் சந்தித்து வருகின்றனரே?
மத்திய அளவிலா அல்லது மாநில அளவிலா என்பதை அவர் முதலில் தெளிவுபடுத்தட்டும்.
குட்கா வழக்கில் சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளதே?
அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அது குறித்து ஏதும் கூற முடியாது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க மறுப்பதாக கூறப்படுகிறதே?
முதலில் நீர்வளத்துறை அமைச்சரை சந்தியுங்கள். பிறகு சந்திக்கிறேன் என்றுதான் பிரதமர் கூறினார்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT