Published : 29 May 2018 07:58 AM
Last Updated : 29 May 2018 07:58 AM
தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் உதவி ஆணையராக இருந்த ஹரிக்குமார் செம்பியத்துக்கும், மாதவரம் உதவி ஆணையராக இருந்த ஜெயசுப்பிரமணியன் பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ரவுடிகளிடம் லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளிவந்த பிரச்சினையில் சிக்கியுள்ள தேனாம்பேட்டை உதவி ஆணையர் முத்தழகு, மத்திய குற்றப்பிரிவுக்கும், லஞ்ச வழக்கில் சிக்கிய திருமங்கலம் உதவி ஆணையர் காஜா கமில் பாட்ஷா திருவாரூர் மாவட்ட மனித உரிமை ஆணையம் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT