Published : 20 May 2018 11:21 AM
Last Updated : 20 May 2018 11:21 AM

சின்னமலை - டிஎம்எஸ் சுரங்கப் பாதையில் 80 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி பாதுகாப்பு ஆணையர் ஆய்வு: ஓரிரு வாரங்களில் ஒப்புதல் கிடைக்கும்

சின்னமலை - டிஎம்எஸ் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் 80 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.

சென்னை அண்ணா சாலை யில் மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டுள்ள சின்னமலை-டிஎம்எஸ் சுரங்கப் பாதை யில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்(தெற்கு) ஏ.கே. மனோகரன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 80 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. சிக்னல் செயல் பாடுகள், கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆணையர் ஆய்வு நடத்தி னார்.

இதுபற்றி கேட்டபோது, மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: சென்னைசென்ட்ரல் - நேரு பூங்கா மற் றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையே ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு வெற்றிகரமாக நடந்து முடிந்து உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள், பயணிகளுக்கான வசதி கள் குறித்தும் அவரிடம் விளக்கினோம். மேற்கண்ட வழித் தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களில் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஒப்பு தல் கிடைத்த பிறகு, தமிழக அரசிடம் முறைப்படி தெரிவிக்கப்படும். அதன் பிறகு, மெட்ரோ ரயில் சேவையை தமிழக அரசு தொடங்கி வைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x