Published : 09 May 2018 07:53 AM
Last Updated : 09 May 2018 07:53 AM

சிபிஎஸ்இ-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

நீட் தேர்வின்போது மாணவர்கள் துன்புறுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஎஸ்இ தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வெழுதச் சென்ற மாணவர்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்கிறோம்.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ தலைவர், தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோர் 6 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்வது அவசியமானதுதான். ஆனால், முன்னெச்சரிக்கை என்ற பெயரில் அவர்களை துன்புறுத்தக் கூடாது.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x