Published : 02 May 2018 08:17 AM
Last Updated : 02 May 2018 08:17 AM
மக்களை திசை திருப்பவே மாநில சுயாட்சி குறித்து திமுக பேசி வருகிறது என்று மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
மாநில சுயாட்சி பற்றி திமுகவினர் பேசுகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே திமுகவுக்கு மாநில சுயாட்சி, தமிழர், தமிழ் பற்றிய நினைவுகள் வரும். 18 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மாநில சுயாட்சி, காவிரியைப் பற்றி நினைக்கவில்லை. இப்போது எதிர்க்கட்சியான பிறகு மக்களை திசை திருப்ப மாநில சுயாட்சி பற்றி பேசுகின்றனர்.
வாஜ்பாய் ஆட்சியில் 5 ஆண்டுகள் பாஜக கூட்டணியில் திமுக அங்கம் வகித்தது. 3-வது அணி சார்பில் வி.பி.சிங், குஜ்ரால் ஆட்சியிலும் திமுக கூட்டணியில் இருந்தது. இவர்களுக்கு எப்படியாவது எங்காவது ஒரு அதிகாரத்தில் இருக்க வேண்டும். தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை. மத்தியிலாவது கூட்டணி ஆட்சியில் பங்கேற்க முடியுமா என்று நினைக்கின்றனர். அதற்கான முயற்சியில் மக்களை திசை திருப்பி, 3-வது அணி, 4-வது அணி என்று திமுக பேசி வருகிறது. இதில் எதுவும் நடக்கப் போவதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT