தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை வாய்ப்பு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல்ஜூலை 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக இன்றும், நாளையும் (ஜூலை 3, 4) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடியலேசான மழைபெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 - 98.6 டிகிரியை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 80.6 - 82.4 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும் இருக்கக் கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: மன்னார்வளைகுடாமற்றும் அதனைஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், மத்திய அரபிக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் ஜூலை 6-ம் தேதி வரையும், பெரும்பாலான வங்கக் கடல் பகுதிகளில்இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு55 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட்டில் 7 செமீ மழை பெய்தது. வெப்பநிலையை பொருத்தவரை தூத்துக்குடியில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in