Published : 30 May 2018 07:33 AM
Last Updated : 30 May 2018 07:33 AM

பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி செல்கிறார்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு தல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தூத்துக்குடி செல்ல உள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடந்த முற்றுகைப் போராட் டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து போலீஸார் நடத் திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தூத்துக்குடி செல்ல இருக்கிறார். சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு தூத்துக்குடி புறப்படும் விமானத்தில் அவர் செல்கிறார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x