Published : 20 May 2018 11:22 AM
Last Updated : 20 May 2018 11:22 AM
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 700 தன்னார்வலர்கள் பங்கேற்று 18 டன் குப்பை கழிவுகளை நேற்று அகற்றினர்.
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு, சிட்டி வங்கி பணியாளர்கள் சார்பில் வண்டலூர் பூங்காவில் குப்பைகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.
இந்தப் பணியை வண்ட லூர் உயிரி யல் பூங்காவின் இயக்குநர் சேகர் குமார் நீரஜ் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
இப்பணியில் 700 தன்னார்வலர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பங்கேற்று பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் வீசி எரிந்த 6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கோடைக் காலத்தில் உதிர்ந்த 12 டன் இலை கழி வுகள் ஆகியவற்றை அகற்றினர். அதனைத் தொடர்ந்து அவர்கள், வண்டலூர் பூங்கா வளாகத்தில் உள்ள சுவர்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் வண்ண ஓவியங்களை வரைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT