Published : 04 May 2018 09:24 AM
Last Updated : 04 May 2018 09:24 AM

தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு தாம்பரத்தில் திமுகவினர் போராட்டம்

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக கூறி தாம்பரம் நகர கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

தாம்பரம் நகர கூட்டுறவு வங்கியில் 11 இயக்குநர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 7-ம் தேதி நடக்க உள்ளது. அதிமுக, திமுகவைச் சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனை நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் 11 பேர் பரிசீலனைக்காகவும், கூடுதலாக மனுதாக்கல் செய்திருந்த 3 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெறவும் நேற்று காலை கூட்டுறவு வங்கிக்கு வந்தனர்.

ஆனால், அங்கு தேர்தல் நடத் தும் அதிகாரியின் அறை பூட்டப்பட்டிருந்தது. இதுபற்றி கூட்டுறவு வங்கி மேலாளரிடம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரி யாது என்று கூறியுள்ளார். இதையடுத்து, அவரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் வங்கியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

இதையடுத்து, போலீஸார் விரைந்து வந்து, அவர்களை கலைந்துபோகுமாறு கூறினர். இதனால், போலீஸாருடனும் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக கூறி, வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பர பரப்பான சூழ்நிலை உருவானது.

இதைத் தொடர்ந்து, தாம்பரம் காவல் உதவி ஆணையர் அசோகன் தலைமையிலான போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுசம்பந்தமாக கூட்டுறவு சங்க அதிகாரி களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர், திமுகவினர் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x