Published : 20 May 2018 11:25 AM
Last Updated : 20 May 2018 11:25 AM

சாலை விபத்துகளில் 2 பேர் பலி

திருவான்மியூரை சேர்ந்த ஞானராஜ் (31)நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் - வண்டலூர் சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பாலத்தில் இருந்து விழுந்து பலியானார். தகவல் அறிந்த பூந்தமல்லி போலீஸார் அவரது உடலை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கேரளாவை சேர்ந்தவர் ஜினேஷ் (36). இவர், திருவல்லிக்கேணி நடேசன் சாலை யில் சென்றபோது அரசு பேருந்து மோதி பலியானார். அண்ணா சதுக்கம் போலீ ஸார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் முனுசாமியை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x