தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் ஜூன் 25-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் ஜூன் 25-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேக மாறுபாடுகாரணமாக, தமிழகத்தில் இன்றுமுதல் 25-ம்தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் நீலகிரிமற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில்கன முதல் மிகக் கனமழைபெய்யக்கூடும். திருப்பூர், தேனி,திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 24-ம் தேதியும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டமலைப் பகுதிகள் உள்ளிட்ட ஓரிரு இடங்களில் 25-ம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில், இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று முதல் 25-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in