Published : 29 May 2018 07:26 AM
Last Updated : 29 May 2018 07:26 AM
ஓய்வூதியம் பெறுவோரில் ஏடிஎம் கார்டு கோரி விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் கார்டு வாங்கிக் கொள்ள லாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வருவாய் நிர் வாக ஆணையர் கொ.சத்யகோபால் நேற்று விடுத்த செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவின ரின் நலனுக்காக முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம், விதவை கள் ஓய்வூதியம் உள்ளிட்ட 9 வகையான ஓய்வூதிய நலத்திட்டங்களை வழங்குகிறது.
ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் நலனுக்காக தொடர்புடைய வங்கிகள் மூலம் ஏடிஎம் (பணப்பற்று அட்டை) கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்க அந்தந்த வங்கிகள் தயாராக உள்ளன. ஏடிஎம் கார்டு கோரிய பயனாளிகள் அவரவர் வங்கிகளை அணுகி தங்களுக்கான ஏடிஎம் கார்டை பெற்றுக் கொள்ளலாம். இதுவரை ஏடிஎம் கார்டு கோரி விண்ணப்பிக்காதவர்கள் அதற் கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT