Published : 24 May 2018 09:45 AM
Last Updated : 24 May 2018 09:45 AM

தோட்டம், கழிவறை, ஆலைகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் 1,000 லிட்டர் விலை ரூ.18.40: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

தோட்டம், கழிவறை, தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் 1,000 லிட்டர் ரூ.18.40-க்கு கிடைக்கும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

குடிநீர் அல்லாத பிற தேவைகளான தோட்டம், கழிவறை, தொழிற்சாலை பயன்பாட்டுக்கு தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தட்டுப்பாடின்றி வழங்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மேற்கண்ட தேவைகளுக்காக கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குடிநீர் வாரியத்தின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 1,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ரூ.18.40-க்கு கிடைக்கும்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களை அறிய, கொடுங்கையூர், கோயம்பேடு கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையங்களின் செயற்பொறியாளரை 8144930800 என்ற எண்ணிலும், நெசப்பாக்கம், பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பொறியாளரை 8144930600 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ள லாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x