நாடாளுமன்றத்தில் பேசாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பேசுகிறோம்: சீமான்

சீமான் | கோப்புப்படம்
சீமான் | கோப்புப்படம்
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாளின் சகோதரி திருமண விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

நாங்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று பேசாவிட்டாலும், மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக எங்கள் கருத்துகளை முன்வைத்துப் பேசி வருகிறோம்.

தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு. மக்களின் இதயங்களை, சிந்தனையை வெல்வதுதான் எங்கள் கனவு. அந்த வகையில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். மிகப்பெரும் கடமையும், பொறுப்பும் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு உயர்ந்த லட்சிய நோக்கமும் உள்ளது. அதை அடைய கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு சீமான் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in