Published : 05 Apr 2018 08:39 AM
Last Updated : 05 Apr 2018 08:39 AM

குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை 2 மாதங்களில் தாக்கல்: ஆணையர் அதுல்ய மிஸ்ரா தகவல்

குரங்கணி தீ விபத்து குறித்து 2 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என விசாரணை ஆணையர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் மார்ச் 11-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, அவர் நேற்று ஈரோட்டில் விசாரணை மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: விபத்து எப்படி ஏற்பட்டது, மலையேற்றப் பயிற்சிக்காக எப்படி அனுமதி வழங்கப்படுகிறது, எத்தகைய விதிமுறை பின்பற்றப்படுகிறது, வனத்துறை சார்பில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா, மலையேற்றக் குழுவினர் ஏதேனும் தவறு செய்துள்ளார்களா என ஆணையம் விசாரித்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைக்கப்படும்.

வெப்பநிலை, ஆக்ஸிஜன், தீப்பொறி, எரிபொருள் என 4 காரணங்களால் தீப்பிடித்திருக்க வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x