Last Updated : 04 Jun, 2024 08:33 AM

1  

Published : 04 Jun 2024 08:33 AM
Last Updated : 04 Jun 2024 08:33 AM

“இண்டியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும்” - தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி

தமிழச்சி தங்கபாண்டியன் | கோப்புப்படம்

சென்னை: “மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கண்டு ஆட்சியைப் பிடிக்கும்” என தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.

தென் சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் தென் சென்னை தொகுதி வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு என்னும் மையத்துக்கு காலை 8 மணிக்கு வருகை தந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திராவிட மாடல் ஆட்சியின் வெற்றியின் காரணமாக மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் திமுக கூட்டணி சந்திக்கும். இந்திய அளவில் இண்டியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைக் கண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சியைப் பிடிக்கும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x