Published : 05 Apr 2018 10:22 AM
Last Updated : 05 Apr 2018 10:22 AM
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை, திருச்சி, தர்மபுரி, நாகர்கோயில் ஆகிய இடங்களில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் மூலம் ஒலிபரப்பப்படும் வர்த்தக ஒலிபரப்பில் 90 சதவீதம் இந்தி மொழிக்குத்தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் கிராமப்புற மக்கள்தான் பெருமளவில் வானொலி ஒலிபரப்பை கேட்கின்றனர். எனவே நிகழ்ச்சிகளை தமிழ் மொழியில் ஒலிபரப்பினால்தான் அவர் களுக்கு பயனளிக்கும்.
நாளொன்றுக்கு வானொலியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் 90 சதவீத அளவுக்கு தமிழ்மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வானொலி நிலையங்களை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முற்படுவது தமிழக உரிமைக்கு எதிரானது ஆகும். இந்தியை திணிக்க முயற்சிக்க கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT