Published : 18 Apr 2018 08:53 AM
Last Updated : 18 Apr 2018 08:53 AM
தமிழகத்துக்கு தற்போதைய தேவை ஆன்மிக அரசியலே என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தசமஹா வித்யா ஹோமம் நடைபெற்று வருகிறது. இதில் 9-ம் நாளான நேற்று நடைபெற்ற ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமத்தில் பத்திரிகையாளரும், ஆடிட்டருமான குருமூர்த்தி பங்கேற்றார். பின்னர் அவர் அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இன்று ஒருநாள் முழுவதும் அரசியல் உட்பட அனைத்தையும் விட்டுவிட்டு ஆன்மிகத்தைத் தேடி வந்துள்ளேன். ஊழலுக்கு எதிராகப் போராடும் தைரியத்தை எனக்கு ஆன்மிகம்தான் வழங்குகிறது. நீங்கள் தொடர்ந்து கேட்பதால் கூறுகிறேன் தமிழகத்துக்கு தற்போதைய தேவை ஆன்மிக அரசியலே” என்றார்.
‘ஆன்மிக அரசியல் என்று ரஜினிகாந்த் கூறியதை குறிப்பிடுகிறீர்களா?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, “ஆன்மிக அரசியலை யார் பேசினாலும் அவர்கள் தேவை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT