Published : 10 Apr 2018 10:42 AM
Last Updated : 10 Apr 2018 10:42 AM
ஏப்ரல் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி வதந்தி என்றும், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் தமிழக மின்சார வாரியம் தெரிவித் துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அத்துடன் இந்த மாதத்துடன் 4 சதவீதம் சர்சார்ஜ் வசூலிக்கப்படும் என்றும் செய்தி பரவியது. சமூக வலைதளங்களில் புதிய கட்டண விகிதம் குறித்த பட்டியலும் வெளியானது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அறிகுறி ஏதும் இல்லை
இந்நிலையில், கட்டண உயர்வு குறித்து மின் வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மின் வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஏப்.1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது வதந்தியாகும். அப்படி எந்தக் கருத்துருவும் இல்லை. அரசும் அறிவிக்கவில்லை.
வீண் வதந்தி
பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்னரே ஒழுங்கு முறை ஆணையம் அரசுக்கு முன்மொழிவு அனுப்பும். தற்போது கட்டண உயர்வுக்கான அறிகுறிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, மின் கட்டணம் உயர்வு என்பது தவறான தகவலாகும். மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி வதந்தி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT