Published : 15 Apr 2018 09:31 AM
Last Updated : 15 Apr 2018 09:31 AM

காவிரி வாரியம் அமைக்கக் கோரி திமுக பிரமுகர் தீக்குளிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக பிரமுகர் நேற்று தீக்குளித்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

காட்டாங்குளத்தூர் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் எஸ்.ரமேஷ் (47). ஆட்டோ ஓட்டுநரான இவர், திமுகவின் கீரப்பாக்கம் ஊராட்சியில் 6-வது வார்டு துணைச் செயலராகவும் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இவரை உறவினர்கள் வண்டலூரில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ரமேஷின் உடலில் 30 சதவீதம் அளவுக்குத் தீக்காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

மன உளைச்சல்

இவரிடம் காயார் காவல் உதவி ஆய்வாளர் சுசீலா வாக்குமூலம் பெற்றார். அப்போது அவர் ’’உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக செயல் தலைவர் .ஸ்டாலின் ஆளுநரை சந்திக்கச் சென்றார்.

ஆனால் ஸ்டாலினை சந்திக்க ஆளுநர் மறுத்துவிட்டார். இதனால் மன உளைச்சல் அடைந்தேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தவே நான் தற்கொலைக்கு முயன்றேன்’’ என்று போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஸ்டாலினை ஆளுநர் சந்திக்க மறுத்துவிட்டதாக ரமேஷி டம் யாரோ தவறான தகவலை கூறி, மனக்குழப்பத்தை ஏற்படுத்தியதாக போலீஸார் தரப் பில் கூறப்படுகிறது.

இவர் தற்போது மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் ரமேஷை திமுக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x