Published : 04 Apr 2018 03:45 PM
Last Updated : 04 Apr 2018 03:45 PM
தான் அறிவித்தபடி திருச்சி உஷா குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கினார் கமல்ஹாசன்.
திருச்சியில் வாகன சோதனையின்போது போலீஸார் விரட்டிச் சென்றதால், பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார் உஷா என்ற பெண்மணி. நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், உஷா குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அறிவித்தார்.
இன்று மாலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி சென்றார் கமல்ஹாசன். இந்நிலையில், உஷா குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன், தான் அறிவித்தபடியே 10 லட்ச ரூபாயை வழங்கினார்.
உஷாவின் அம்மா லூர்துமேரி மற்றும் சகோதரர் ராபர்ட்டுக்கு 5 லட்ச ரூபாய், உஷாவின் கணவர் ராஜாவுக்கு 5 லட்ச ரூபாய் என 10 லட்ச ரூபாயைப் பிரித்து வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT