Published : 10 May 2024 05:45 AM
Last Updated : 10 May 2024 05:45 AM

கடந்த 20 ஆண்டுகளில் பெற்ற நன்கொடை விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா? - காங்கிரஸுக்கு தமிழக பாஜக கேள்வி

சென்னை: கடந்த 20 ஆண்டுகளில் பெரு நிறுவனங்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்ற நன்கொடை விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா என தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அரை நூற்றாண்டு கால ஆட்சி அதிகாரம் நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா என நேரு குடும்பத்திடம்தான் இருந்தது.

அந்த அதிகார திமிர், ஆணவம் இப்போது சோனியா, ராகுல், பிரியங்காவிடம் வெளிப்படுகிறது. ஆர்எஸ்எஸ் பற்றியும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் அவதூறாகப் பேசி சவால் விட்டு உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டவர் ராகுல். இப்படிப்பட்ட ராகுல்தான் இப்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் மோடிக்கு சவால் விட்டு வருகிறார்.

அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களை விமர்சித்துக் கொண்டே, அவர்களிடம் நன்கொடைகளை வாங்கி குவிக்கிறது காங்கிரஸ். அம்பானி, அதானி குழும நிறுவனங்களுடன் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் ராகுல் சவால்விடுகிறார். இந்த சவடாலை, ஆணவத்தைதான் பிரதமர் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

2004-ல் ராகுல் எம்.பி.யான பிறகு கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு நன்கொடை பெற்றது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x