Published : 10 May 2024 05:30 AM
Last Updated : 10 May 2024 05:30 AM

மினி பேருந்து கட்டணம் உயர்வா? - அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தனியார், மினி பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றஉரிமையாளர்களின் கோரிக்கை குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், துறைசார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக போக்குவரத் துத் துறை அதிகாரிகள் கூறிய தாவது: கடந்த 1997-ம் ஆண்டு கிராமப்புறங்களுக்கு பேருந்து சேவை வழங்கும் வகையில் மினி பேருந்து திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த மினி பேருந்துகள், 16 கி.மீ.வரை சேவையில்லாத வழித்தடத்திலும், 4 கி.மீ. முக்கிய சாலைகளில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டு தற்போது 2,800-க்கும் மேற்பட்ட மினிபேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வகை பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்எனவும், எல்லையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதைக் கருத்தில்கொண்டு தனியார், மினி பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து போக்குவரத்துத்துறை பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதுகுறித்து விரைவில்அறிவிப்பு வெளியாக வாய்ப்புள் ளது.

புதிய பேருந்துகள்: அதுமட்டுமின்றி, போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் விரைவில் நிறைவு பெறும்.

மேலும், ஜூன் மாதத்தில் புதிய 100 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கூடுதல் மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் இம் மாத இறுதியில் கோரப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x