சாலையில் நடந்து சென்ற தம்பதியை விரட்டி கடித்த வளர்ப்பு நாய்: தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற தம்பதியை நாய்ஒன்று விரட்டி, கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் தொடர்ந்து நடக்கும் நாய்க்கடி சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவைச் சேர்ந்தவர்சுரேஷ்(43). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் மாலை மனைவி நீலா(40) உடன் வீட்டு அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்றார். அப்போது நீலாவை, அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவர் வளர்த்து வரும் நாய் கடித்துள்ளது. அதிர்ச்சி அடைந்த கணவர் சுரேஷ், நாயை விரட்ட முயன்றபோது, அவரையும் அந்த நாய் விடாமல் துரத்திச் சென்று காலில் கடித்துள்ளது.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நாயை துரத்தினர். பின்னர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் சேர்த்த னர். இச்சம்பவம் குறித்து நீலாசூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நாயை வளர்த்து வரும் மல்லிகாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.

ஏற்கெனவே, சில தினங்களுக்கு முன், நுங்கம்பாக்கத் தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் இரண்டு கடித்து குதறியது. அதை தொடர்ந்து பரங்கிமலை காவலர் குடியிருப்பில் ஒரு சிறுவனை நாய் விரட்டிக் கடித்தது.

பொதுமக்கள் அச்சம்: தற்போது சூளைமேட்டில் கணவன், மனைவியை நாய் கடித்து குதறி உள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் சென்னைமாநகராட்சி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in