Published : 09 May 2024 05:34 AM
Last Updated : 09 May 2024 05:34 AM

காற்றாலை மூலம் 2,000 மெகாவாட் உற்பத்தி: தினசரி மின் தேவை பூர்த்தியாகும் என மின்வாரியம் நம்பிக்கை

சென்னை: தமிழகத்தில் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் ஆகும். இந்த காலகட்டத்தில் காற்றாலையில் இருந்து தினமும்2,500 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதனால், தினசரி மின்நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2-ம் தேதி தினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.இந்நிலையில், காற்றாலை சீசன்தொடங்கி உள்ளதால், காற்றாலைகளில் இருந்து தினசரி சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் 10,600 மெகாவாட் திறனில் காற்றாலைகளை நிறுவி உள்ளன. சீசன் காலத்தில் காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைக்கும். அனல் மின்சாரம் கொள்முதல் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவாகும்.

தற்போது, காற்றாலை சீசன்தொடங்கி உள்ளதால் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதனால், வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவது படிப்படியாக நிறுத்தப்படும்.

மேலும், தென்மாவட்டங்களில் கோடை மழை பெய்யத் தொடங்கிஉள்ளதால் தினசரி மின்தேவை குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், தினசரி மின்தேவையை மின்வாரியம் எளிதாக பூர்த்தி செய்யும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x