மதுரையில் கத்திரி வெயிலை குளிர்வித்த கோடை மழை!

மதுரை தல்லாகுளம் பகுதியில் நேற்று மாலை பெய்த மழையில் நனைந்தபடியே வாகனங்களில் பயணம் செய்த மக்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை தல்லாகுளம் பகுதியில் நேற்று மாலை பெய்த மழையில் நனைந்தபடியே வாகனங்களில் பயணம் செய்த மக்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டத்தில் கத்திரி வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று அதனை தணிக்கும் வகையில் நேற்று மாலை கோடை மழை குளிர்வித்தது. அனல் கக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதை கண்டு மக்கள், மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. 105 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவான முக்கிய நகரங்களில் மதுரையும் ஒன்றாக இருந்தது. அதனால் பகல் பொழுதில் சாலைகளில் அனல் காற்றும், வெப்பக் கதிர் வீச்சும் வீசியது. இதனால் கரோனா ஊரடங்கைப் போல் பகலில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில் கோடை வெயிலால் சிரமப்பட்டு வந்த மக்களுக்கு இதமளிக்கும் வகையில் நேற்று மாலை முதல் மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

இடியுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஈர மண்ணின் வாசனையையும், குளிர்ந்த காலநிலையையும் மக்கள் அனுபவித்தனர். சாலைகளில் மழை பெய்தாலும் அதற்கு பயந்து கட்டிடங்களுக்கு கீழ் ஒதுங்காமல் நனைந்தபடியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோடை மழை இதுவரை பெய்யாதால் நிலத்தடி நீர் மட்டமும், நீர் நிலைகளிலும் தண்ணீர் குறைந்து வந்தது. இந்த கோடை மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், வெப்பம் தணியவும் வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in