சென்னையில் சிறுமியை கடித்த நாய்களை சிங்கம்புணரிக்கு கொண்டு வந்த உரிமையாளர் - கிராம மக்கள் அச்சம்

வையாபுரிபட்டி தோட்டத்தில் வளர்க்கப்படும் நாய்கள்.
வையாபுரிபட்டி தோட்டத்தில் வளர்க்கப்படும் நாய்கள்.
Updated on
1 min read

சிங்கம்புணரி: சென்னையில் சிறுமியை கடித்த நாய்களை சிங்கம்புணரிக்கு உரிமையாளர் கொண்டு வந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 வெளி நாட்டு ரக நாய்கள் கடித்ததில் சிறுமி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அந்த 2 நாய் களையும் உடனடியாக அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் அதன் உரிமையாளர் புகழேந்திக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த நாய்களை புகழேந்தி சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வையாபுரி பட்டியில் உள்ள தோட்டத்தில் வைத்து வளர்த்து வருகிறார்.

அந்த நாய்களோடு மேலும் சில நாய்களையும் வளர்த்து வருகிறார். இதனை கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் தங்கள் பகுதியில் ராட்வைலர் நாய்களை வளர்ப்பதால் வையாபுரிபட்டி மக்கள் அச்சமடைந்தனர். அந்த நாய்களை தொண்டு நிறுவன பராமரிப்பில் விட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in