Published : 08 May 2024 05:35 AM
Last Updated : 08 May 2024 05:35 AM

நாய் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுமியின் தலையில் நாளை ‘பிளாஸ்டிக் சர்ஜரி’

சென்னை: நாய் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுமியின் தலையில் நாளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்யமருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது லேன் பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளி மற்றும் பராமரிப்பாளராக வேலை செய்து வருபவர் விழுப்புரத்தை சேர்ந்த ரகு.

மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுரக்‌ஷாவுடன் பூங்காவிலேயே வசித்து வருகிறார். கடந்த 5-ம் தேதி சிறுமி பூங்காவில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, பூங்காவின் எதிர் வீட்டில் வளர்த்துவரும் 2 நாய்கள் திடீரென வீட்டிலிருந்து வெளியேறி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்து குதறியது.தலை, கைகள், கால்களில் பலத்த காயமடைந்த சிறுமி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுமியின் காயங்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுமியின் தலையில் முடிகளுடன் சதை கிழிந்துவிட்டதால், அதற்காக பிளாஸ்டிக்சர்ஜரி சிகிச்சையை நாளை செய்யமருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். சிறுமி முழுவதுமாக குணமாக சில மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, அஜாக்கிரதையாக செயல்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் புகழேந்தி, அவரது மனைவி தனலஷ்மி, மகன் வெங்கடேஸ்வரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் ஜாமீனில்விடுவிக்கப்பட்டதை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மதுரை அனுப்பப்பட்ட நாய்கள்: இரண்டு ராட்வைலர் நாய்களையும் 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று நாய்களின்உரிமையாளர் புகழேந்தி வீட்டில்சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு இரண்டு நாய்களும் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x