Published : 08 Apr 2018 09:04 AM
Last Updated : 08 Apr 2018 09:04 AM
சித்ரா பவுர்ணமி விழா வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வார்கள். இதையொட்டி மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுபற்றி அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘திருவண்ணாமலை கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா வெகு விமரிசையாக நடக்கும் என்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். மக்களின் வசதி கருதி வரும் 28, 29, 30 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல, தாம்பரத்தில் இருந்து 100 பேருந்துகள், அடையாறு, பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் கூட்டம் வர வர, பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT