Published : 02 Apr 2018 07:52 AM
Last Updated : 02 Apr 2018 07:52 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 11-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நதிநீர் பிரச்சினை மட்டுமின்றி ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பறித்து வருகிறது. இதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் சார்பில் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT