Published : 04 May 2024 08:56 AM
Last Updated : 04 May 2024 08:56 AM

கொடைக்கானலில் 5 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்

கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் குடும்பத்தினருடன் 5 நாட்கள் ஓய்வெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கடந்த ஏப். 29-ம் தேதி ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அங்கு தனியார் ஹோட்டலில் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுத்த முதல்வர் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கொடைக்கானலில் இருந்து காரில் மதுரைக்குப் புறப்பட்டார்.

ஹோட்டலுக்கு வெளியே நின்றிருந்த கட்சி நிர்வாகிகள் சிலரிடம் சால்வைகளைப் பெற்றுக்கொண்டார். வழியில், பெருமாள் மலை கிராமத்தில் சாலையோரம் நின்றிருந்த மக்களிடம் மனுக்களைப் பெற்றார். கொடைக்கானல் மலையடிவாரம் காட்ரோடு அருகேயுள்ள கவிஞர் வைரமுத்து பண்ணை வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு தேநீர் அருந்தினார்.

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு அங்கிருந்து மதுரை விமான நிலையம் புறப்பட்டார். வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று இரவு 7.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினருடன் முதல்வர் புறப்பட்டு இரவு 8 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

முன்னதாக, கொடைக்கானலில் தங்கியிருந்தபோது அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சந்திக்க அனுமதிக்கப்படாத நிலையில், நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமியை மட்டும் வரவழைத்து, முதல்வர் பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x