தஞ்சை பெரிய கோயிலை தமிழக அரசு சிதைப்பதாக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை: இந்து சமய அறநிலையத் துறை எச்சரிக்கை

தஞ்சை பெரிய கோயிலை தமிழக அரசு சிதைப்பதாக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை: இந்து சமய அறநிலையத் துறை எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைதளங்களை உடைத்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒரு காணொளி காட்சிசமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்து சமய அறநிலையத்துறையால் தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சந்நிதியின் பின்புறத்தில் உள்ள தரைத்தளம் மேடு பள்ளங்களுடன் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்கு சிரமமாக உள்ளதால் தரை தளத்தில் பராமரிப்பு பணிகள் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பெருவுடையார் கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலைத்துறையின் மீது அவதூறு பரப்பும்வகையில் காணொளி வெளியிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in