Published : 11 Apr 2018 09:51 AM
Last Updated : 11 Apr 2018 09:51 AM

சென்னையில் போராடிய 780 பேர் கைது

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 780 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாம் தமிழர் கட்சியினர் 237 பேர், மனிதநேய ஜனநாயக கட்சி 125 பேர், மே 17 இயக்கம் 59 பேர், திராவிடர் விடுதலை கட்சியினர் 75, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 63, ரஜினி மக்கள் மன்றம் 32, டிசம்பர் 3 இயக்கம் 5 பேர், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர் 62 பேர், புரட்சிகர மாணவர் இயக்கத்தினர் 69 பேர் உட்பட மொத்தம் 780 பேரை போலீஸார் கைது செய்து ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் அடைத்து வைத்தனர்.

முன்னதாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தை முற்றுகையிட புறப்பட்டனர். அவர்களைத் தயாராக நின்றிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x