Published : 29 Apr 2024 05:31 AM
Last Updated : 29 Apr 2024 05:31 AM

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் சென்னை வந்த அவர், சென்னையில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இந்நிலையில், நேற்று அவர் மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றார். 3 நாட்கள் பயணமாக சென்றுள்ள அவர், சொந்த காரணமாக, தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் வரும் செவ்வாய்க்கிழமை அவர் சென்னை திரும்புவார் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x