Published : 08 Aug 2014 09:48 AM
Last Updated : 08 Aug 2014 09:48 AM
காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால், அவரின் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கொருக்கத் தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்ய ராஜ்(30). பி.டெக் பட்டதாரியான இவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். பாக்யராஜ் ஏற்கெனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார்.
இந்நிலையில், கொருக்கத்தூர் பகுதியைச் சேர்ந்தவரும், மாங்காடு பகுதி யில் உள்ள தனியார் மருத்து வக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு மாணவியு மான விஜயலட்சுமி(21) என்ப வரை காதலித்து, 4 மாதங்களுக்கு முன், பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்துக்கு விஜய லட்சுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த திங்கள் கிழமை, கல்லூரி விடுதியில் தூக் கிட்டு தற்கொலை செய்ய முயன் றார். விஜயலட்சுமி, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தகவல் தெரிந்ததும் திருத்தணி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்த பாக்யராஜ் மனமுடைந்து புதன்கிழமை இரவு அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தன் தற்கொலை குறித்து பாக் யராஜ் ஏற்கெனவே எழுதி அறை யில் வைத்திருந்த கடிதத்தில், “காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால், வாழ்வதற் குப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாக” எழுதியுள்ளார்.
இதுகுறித்து, திருத்தணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT