Published : 14 Apr 2018 09:59 AM
Last Updated : 14 Apr 2018 09:59 AM

பராமரிப்பு பணிகள் காரணமாக 2 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை - ராயபுரம் ரயில் நிலையங்கள் மற்றும் பட்டாபிராம் வெஸ்ட் சைடிங் - திருவள்ளூர் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் இன்றும் (14-ம் தேதி), நாளையும் (15-ம் தேதி) நடக்கவுள்ளன. இதனால், 30-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

14-ம் தேதி (இன்று) வேளச்சேரியில் இருந்து ஆவடிக்கு காலை 10.15, திருவள்ளூருக்கு மதியம் 12.15, சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு மதியம் 12.35, திருவள்ளூருக்கு காலை 9.30 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் ஆவடியில் இருந்து வேளச்சேரிக்கு மதியம் 12.10, திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 2.40, வேளச்சேரிக்கு காலை 11.05 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு காலை 9.15, 9.30, 11.30 மணி மற்றும் வேளச்சேரியில் இருந்து திருவள்ளூருக்கு காலை 9.05, திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 10.50, 11.25, மதியம் 1.05, திருவள்ளூரில் இருந்து வேளச்சேரிக்கு காலை 11.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளூர் - வேளச்சேரிக்கு மதியம் 1.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். வேளச்சேரியில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு மதியம் 12.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.

கடம்பத்தூர் - வேளச்சேரி மதியம் 12.05 மணி மின்சார ரயில், ஆவடி - வேளச்சேரி மதியம் 2.40 மணி மின்சார ரயில்கள் சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும். மேலும், வேளச்சேரி - திருத்தணி மதியம் 12.15, வேளச்சேரி - அரக்கோணம் மதியம் 2.30, வேளச்சேரி - சூலூர்பேட்டைக்கு மதியம் 2.45 மணிக்கு செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

15-ம் தேதி

சென்னை கடற்கரையில் இருந்து ஆவடிக்கு காலை 11.10, திருவள்ளூருக்கு மதியம் 1.05, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு மதியம் 1.50, சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு மதியம் 12.35, திருவள்ளூருக்கு காலை 9.30 மற்றும் ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 12.10, திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 2.40, சென்னை கடற்கரைக்கு காலை 11.05 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு காலை 9.15, 9.30, 11.30 மணி சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு காலை 9.50, திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 10.50, 11.25, மதியம் 1.05, திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 11.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 1.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.

கடம்பத்தூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 12.05, ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 2.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும். சென்னை கடற்கரை - திருத்தணிக்கு மதியம் 12.10, அரக்கோணத்துக்கு மதியம் 2.25 மணி, சூலூர்பேட்டைக்கு மதியம் 2.40 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x