Published : 28 Apr 2024 04:52 AM
Last Updated : 28 Apr 2024 04:52 AM

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் விடுவிப்பு

கோப்புப் படம்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள், கடந்த மார்ச் 24-ம் தேதி2 விசைப்படகுகளில் கடலுக்குமீன்பிடிக்கச் சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறிஇரு படகுகளையும் பறிமுதல்செய்த இலங்கை கடற்படையினர், 24 மீனவர்களையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 4-ம் தேதி இலங்கை நீதிமன்றம் 24 பேரையும் விடுதலை செய்து, தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அவர்கள் நேற்று முன்தினம் இரவு கொழும்புவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, பிரத்யேக வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x