கூட்டுறவு சங்க தேர்தல்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விளக்கம்

கூட்டுறவு சங்க தேர்தல்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விளக்கம்
Updated on
1 min read

புதுக்கோட்டை: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்படும்.தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாக சிலர் விமர்சிக்கலாம். ஆனால், உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்ட பிறகுதான், தேர்தலை நடத்த முடியும்.

பொதுவாக கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருவது இயல்பு. எனினும், தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும்சிறு தொழில்முனைவோருக்கான கடன் இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in