Published : 22 Apr 2018 08:36 AM
Last Updated : 22 Apr 2018 08:36 AM
சென்னையில் நேற்று தங்கம் ஒரு பவுன் மீண்டும் ரூ.24 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
17 மாதங்களுக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.24 ஆயிரத்தை தாண்டி இருந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.80 குறைந்து 22 கேரட் தங்கம் ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 960-க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 8 ஆக உயர்ந்திருந்தது. நேற்று 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.6 குறைந்து, ரூ.3 ஆயிரத்து 1-க்கு விற்பனை ஆனது. இதுவே, வெள்ளிக்கிழமை ரூ.2 ஆயிரத்து 995-க்கு விற்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT