Published : 22 Apr 2024 05:30 AM
Last Updated : 22 Apr 2024 05:30 AM

ஐ.சி.எஃப் வளாகத்தில் சிறிய ரக ரயில் மாதிரி கண்காட்சி

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, சென்னை ஐசிஎஃப் ரயில் அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு கண்காட்சியை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இதில் மாணவர்கள், ரயில் ஆர்வலர்கள் உருவாக்கிய சிறிய ரக ஓடும் ரயில்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி, சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் உள்ள சென்னை ரயில் அருங்காட்சியகத்தில் சிறிய ரக ரயில் மாதிரி கண்காட்சி கடந்த 18-ம் தேதிதொடங்கியது.

தேர்தல் வாக்குப்பதிவு நாள் என்பதால் ஏப்.19-ம்தேதி விடுமுறை விடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20, 21) ஆகிய நாட்களில் கண்காட்சி நடைபெற்றது.

இறுதி நாளான நேற்று ஏராளமானவர்கள் சென்னை ரயில் அருங்காட்சியகத்துக்கு வருகைதந்து, சிறு ரயில் மாதிரிகளை பார்வையிட்டனர். 3 நாட்களில் சுமார் 2,500 பேர் கண்காட்சியை பார்வையிட்டு ரசித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி சிறுவர்கள் ஆவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x