மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை
Updated on
1 min read

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விடுத்த அறிக்கை:

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகள். கூட்டணி தர்மத்தோடு, வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்தவர்களுக்கு தேமுதிக சார்பில் பாராட்டுகள். ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக ஆற்றியிருக்கிறோம்.

வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. மக்கள் தீர்ப்பேமகேசன் தீர்ப்பு என்ற வகையில்மக்கள் நல்ல தீர்ப்பை அதிமுக,தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in