தென்காசியில் எந்த கட்சியும் பணம் பட்டுவாடா செய்யாதது பெரிதும் வரவேற்கத்தக்கது: கிருஷ்ணசாமி கருத்து

தென்காசியில் எந்த கட்சியும் பணம் பட்டுவாடா செய்யாதது பெரிதும் வரவேற்கத்தக்கது: கிருஷ்ணசாமி கருத்து
Updated on
1 min read

தென்காசி: தென்காசி தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்தக் கட்சியும் பணம் கொடுக்கவில்லை என்பது வரவேற்புக்குரியது என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

தென்காசி தொகுதியில்அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பணம் கொடுத்து வாக்கு வாங்கும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது எனது கனவு. தென்காசிதொகுதியில் எந்தக் கட்சியும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய தகவல். வரும் காலங்களிலும் இதேபோல இருந்தால், பெரிய மாற்றம் வரும்.

வாக்காளர் பட்டியலில் பெரும்பாலானோரின் பெயர்கள் நீக்கம்செய்யப்பட்டதற்கு ,அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in