40 தொகுதிகளிலும் ‘இண்டியா’ கூட்டணிக்கு வெற்றி: ப.சிதம்பரம் நம்பிக்கை

40 தொகுதிகளிலும் ‘இண்டியா’ கூட்டணிக்கு வெற்றி: ப.சிதம்பரம் நம்பிக்கை
Updated on
1 min read

சிவகங்கை: தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ப.சிதம்பரம் நேற்று வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படும். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை, நாங்கள் சீர்செய்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in